சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் அஜய்தேவா 24, 4கொலை வழக்கு, டாஸ்மாக் கடை கொள்ளை, செயின் பறிப்பு உள்ளிட்ட பல வழக்குகளில் காவல்துறையினர் தேடி வந்துள்ளார்கள்.
இந்நிலையில் இவர் கொட்டும் மழையில் நடுவே திருப்புவனத்தில் உறவினர் வீட்டு காதணி விழா சீர்வரிசை ஊர்வலத்தில் குற்றவாளி செல்வதாக வந்த தகவலையடுத்து எஸ். ஐ. , சிவப்பிரகாஷ் போலீசாருடன் சென்று பிடித்து வேனில் ஏற்ற முயற்சித்துள்ளார்.
உடன் வந்த உறவினர்கள் கைது செய்ய விடாமல் எஸ். ஐ. , யுடன் தகராறில் ஈடுபட்டு மறித்துள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு காவல்துறைகளுடன் வந்த இன்ஸ்பெக்டர் சிவகுமார் அவர்களை ஓதிக்கு தள்ளிவிட்டு ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். குற்றவாளி அழைத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.