கோவில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு கை புறா பந்தயம்

81பார்த்தது
சிவகங்கை மாவட்டம்
தளக்காவூரில் இளைஞர் நற்பணி மன்றத்தால் கோவில் திருவிழாவை முன்னிட்டு கைபுறா பந்தயம் நடைபெற்றது. சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை , ராமநாதபுரம் ஒப்படை பல்வேறு மாவட்டங்களில் இருந்து 6 மாடுகள் பங்கேற்றன.
மாட்டின் கழுத்தில் கட்டப்பட்டுள்ள கயிற்றைப் பிடித்துக் கொண்டு மாடு உரிமையாளர், பந்தய தூரத்தை கடக்க வேண்டும். முதலிடத்தை பிடித்து வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு 6025 ரூபாய் ரொக்கத் தொகை பரிசாக வழங்கப்பட்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற கைப்புறா பந்தயத்தை சாலையின் இரு புறங்களிலும் கூடியிருந்த ரசிகர்கள் உற்சாகமாக கண்டு களித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி