பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு

74பார்த்தது
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கொம்புக்காரனேந்தல் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர் 15 ஆசிரியர் பணியாற்றி வருகின்றனர் இந்த நிலையில் இன்று பெற்றோர்கள் தலைமை ஆசிரியர் தண்ணாயிரம் மூர்த்தி மீது பல்வேறு புகார்களை கூறி முற்றுகையிட்டு தற்போது போராட்டத்தில் ஈடுபட்டனர் குறிப்பாக மாணவர் மாணவிகளிடம் பேப்பர் பேனா வாங்க வேண்டும் என்று மாணவர்களிடம் 300 முதல் 400 வரை வசூல் செய்ததாகவும் , இயற்பியல் ஆசிரியர் சிவசங்கரி தலைமை ஆசிரியரிடம் தொடர்ந்து தவறுகளை குறித்து தட்டி கேட்டதாகவும் கூறப்படுகிறது இதனால், பள்ளி மேலாண்மை குழு சங்க தலைவி கவிமணி மற்றும் தலைமை ஆசிரியர் தணணாயிரம்மூர்த்தி ஆகியோர் தவறான தகவல்களை கூறியாதல் இயற்பியல் பெண் ஆசிரியர் சிவசங்கரி மன உளைச்சலில் விஷம் குடித்து சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி அனுமதிக்கப்பட்டுள்ளார் மேலும் தலைமை ஆசிரியர் மீது சாதி ரீதியிலான பாகுபாடு பார்ப்பதாகவும் கிராம பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் தற்போது ஆசிரியர்களை பள்ளிக்குள் உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் இன்று காலை சுமார் 11 மணியளவில் பரபரப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி