கூட்டுறவுத்துறை அமைச்சர் பரபரப்பு பேச்சு

72பார்த்தது
சிவகங்கையில் நகர, ஒன்றிய திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் பேசியதாவது:
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும். இதற்காக 234 தொகுதிகளிலும் நாம் பணியாற்றவேண்டும். எதிர்க்கட்சிகள் வலுவிழந்து விட்டதாக நினைத்து சாதாரணமாக இருக்கக் கூடாது. கிளை நிர்வாகிகள் மக்களின் தேவைகளை அறிந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மாவட்டத் துணைச் செயலாளர் சேங்கைமாறன், நகராட்சித் தலைவர் சி. எம். துரைஆனந்த், துணைத் தலைவர் கார்கண்ணன், ஒன்றியச் செயலாளர்கள் முத்துராமலிங்கம், ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி