ஸ்ரீ ஊர் காவலசுவாமி திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா

64பார்த்தது
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள குவளை வேலி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஊர் காவல சுவாமி திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது
இதையொட்டி, கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு கணபதி ஹோமம் உள்ளிட்ட ஹோமங்கள் நடைபெற்றன. பின்னா் அஷ்டபந்தனம் சாற்றுதல், நாடிசந்தானம், யாத்ராதானம், மகா பூா்ணாஹுதி உள்ளிட்டவை நடைபெற்றன. இதனைத் தொடா்ந்து, கோபுர கலசங்கள் மீது புனித நீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தா்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது. அன்னதானமும்இன்று மதியம் சுமார் 3 மணி வரை நடைபெற்றது

தொடர்புடைய செய்தி