சிவகங்கை: உலக நன்மைக்காக பக்திபூர்வ நிகழ்வு

66பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில், உலக நன்மை வேண்டி மரங்களுக்கு திருமணம் நடத்தும் சிறப்பு நிகழ்வு பக்திபூர்வமாக நடைபெற்றது. மகாபாரத காலத்தில் பஞ்சபாண்டவர்கள் வனவாசம் செய்தபோது, கீழடியில் தங்கியிருந்ததாக கருதப்படுகிறது. அப்போது அவர்கள் வழிபட்ட சிவன், இங்குள்ள அர்ச்சுனலிங்கேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். 

இந்த அடிப்படையில், சிவனின் வடிவமான அரச மரத்திற்கும், சக்தியின் வடிவமான வேம்பு மரத்திற்கும் திருமணம் நடத்தப்பட்டது. அரச மரத்திற்கு சேலை அணிவிக்கப்பட்டு, வேம்பு மரத்திற்கும் புதிய ஆடைகள் அணிவிக்கப்பட்டன. இரண்டு மரங்களுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டன. கணேசபட்டர் அரச மரம் சார்பாகவும், மலையப்பபட்டர் வேம்பு மரம் சார்பாகவும் காப்பு கட்டி, மாலை மாற்றினர். முக்கியமான திருமண நிகழ்வு நடைபெற்றது. வேம்பு மரத்திற்கு திருமங்கலயம் அணிவிக்கப்பட்டது. 

பின்னர் பெண்கள் திருமங்கலயக் கயிறுகளை புதிதாக மாற்றி ஆனந்தமுடன் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் கீழடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் திருமண விருந்து வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி