சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழ பூவந்தி பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜன் (51) இவர் கழுங்குபட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது மடப்புரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த வீரபாண்டி (வயது 39) என்பவர் வரதராஜனிடம் பணம் பறிப்பில் ஈடுபட்டதாக திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் சதீஷ்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.