சிவகங்கை மாவட்டம் மானாமதுரை இருப்புப்பாதை காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் வசந்தி, தனுஷ்கோடி மற்றும் காவல் குழுவினர் போதைப் பொருள் தடுப்பு பணியில் மானாமதுரை ரயில் நிலையத்தில் ரோந்து சென்றனர். அப்போது நடைமேடை எண்-2ல் வந்த வண்டி எண்-16734மண்டபம் செல்லும் ரயில் வண்டியில் சோதனை செய்த போது, பொதுப் பெட்டியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 5 கிலோ புகையிலை பொருட்களை வைத்திருந்த நிலேஷ் தத்தா கஸ்பே (28) என்பவரை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றன