சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே பெரிய கண்ணனூர் கீழகுடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவருடைய மகன் அர்ஜுனன் (வயது 55).. இவர் கலைக்குளம் கிராம கண்மாயில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. திடீரென மின்னல் தாக்கியதில் அர்ச்சுனன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற இளையான்குடி காவல் துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இளையான் குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மின்னல் தாக்கியதில் அவர் இறந்ததாக காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.