சிவகங்கை மாவட்டம், பூவந்தி அருகே சித்தாலங்குடியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் பைக்கில் படமாத்தூர் சென்றார். அப்போது, பாலத்தில் மோதி படுகாயமடைந்தார். அவரை மதுரை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், சிறுவன் மற்றும் அவருக்கு பைக் கொடுத்த உறவினர் கார்த்திக்ராஜா ஆகியோர் மீது பூவந்தி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.