சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப்பள்ளியில் எல்லாம் இறைவனின் அதிமிக மகிமைக்காக இன்னும் அதிகமாக என்ற தாரக மந்திரத்தை இவ்வுலகிற்கு எடுத்துரைத்து இயேசு சபையை உருவாக்கிய புனிதர் லயோலா இஞ்ஞாசியாரின் பெருவிழா கொண்டாடப்பட்டது. காலையில் பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கைப்பந்து போட்டியானது நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பள்ளியில் புதிய கணினி அறையை பள்ளியின் அதிபர் அருட்தந்தை பாபு வின்சென்ட் மாணவர்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் பின்னர் அருட்தந்தை அருள் தலைமையில் அருட்தந்தையர்கள் முன்னிலையில் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. இதில் பள்ளியின் முன்னாள் ஆசிரியர்கள் இந்நாள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பள்ளியின் தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் அருட்தந்தை சேவியர் தாஸ் மற்றும் பள்ளியின் செயலர் ஜான் கென்னடி மற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் இணைந்து ஏற்பாடு செய்தனர்.