ஆறு கிராமங்களில் திடீர் சூறாவளி

2383பார்த்தது
சிவகங்கை அருகே விட்டனேரி ஊராட்சி விட்டனேரி, குருக்கத்தி, சாத்தனி, உடவயல், அல்லூர் ஊராட்சி சூறவத்தி, ராணியூர், இலுப்பக்கோட்டை ஆகிய 6 கிராமங்களில் மாலை 4 மணி முதல் 5 மணி வரை திடீரென பலத்த சூறாவளி வீசியது.
இதில் சாத்தனி, உடவயல், விட்டனேரி, குருக்கத்தி ஆகிய கிராமங்களில் 4 வீடுகளின் மேற் கூரைகள் சேதமடைந்தன. மேலும் 50-க்கும் மேற்பட்ட மரங்கள் வேறோடு சாய்ந்தன. சில மரங்கள் மின்கம்பிகளில் சாய்ந்ததால் மின் தடை ஏற்பட்டது. இதையடுத்து மின் ஊழியர்கள் மரங்களை அகற்றினர். மழையின்றி சூறாவளி மட் டும் வீசியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி