சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கருதாஊரணி ஸ்ரீ சபரி சாஸ்தா 28 ஆம் ஆண்டு பஜனை குழு சார்பாக பஜனை மடத்தில் கார்த்திகை 1ஆம் தேதி முதல் பஜனைகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஐயப்பனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பஜனைகள் நடைபெற்றது. 8000க்கும் மேற்பட்ட ஐயப்பன் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஐயப்பனை வழிபட்டனர். அதைத்தொடர்ந்து நடைபெற்ற அன்னதானத்தில் அனைவரும் கலந்து கொண்டனர்.