சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம்நகரில் ஸ்ரீ பாலமுருகன் கோவில் உள்ளது. இன்று 11ம்தேதி பங்குனி உத்திரம் தினத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக் ஆராதனைகள் நடைபெற்றது. முன்னதாக விநாயகரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். பின்னர் ஸ்ரீ பாலமுருகனுக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர்திருநீர், 11வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. அபிஷேகங்களுக்கு பின்னர் முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்திருந்தனர். பக்தர்கள் பக்தர்கள் சஷ்டி கவசம் பாடினர். திரளான பக்தர்கள் அரோகரா அரோகரா என்று சாமி தரிசனம் செய்தனர்.