ஆட்சியர் முடிவெடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

269பார்த்தது
சிவகங்கையை சேர்ந்த தங்கராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறி இருப்பது:
சிவகங்கை காமராஜர் காலனி கொட்டகுடி கோவில் திடலில் வருகின்ற 13-ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடத்த அனுமதி அளிக்க வேண்டும் எனவும் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். போட்டி நடத்த அனுமதி அளிக்க சிவகங்கை மாவட்ட ஆட்சியர் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு உத்தரவு பிறப்பிக்க கோரி மனுவில் குறிப்பிட்டார்.
இந்த மனு நீதிபதிகள் சுந்தர் மற்றும் கலைமதி ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து வரும் 11ம் தேதிக்குள் உரிய முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி