சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி அலுவலகத்தி பொங்கல் திருநாளை முன்னிட்டு நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் துணைத் தலைவர் ரமேஷ், ஆணையாளர் தாமரை, திமுக நகர செயலாளரும் கவுன்சிலர் பாலமுருகன் முன்னிலையில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பாட்டம் நடைபெற்றது இதில் கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் சமூக ஆர்வலர்கள் , அனைத்து கட்சியை சார்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். தமிழர்களின் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் வைத்து கோலாலமாக கொண்டாடினர்.