சிவகங்கை மாவட்டம் புளியால் அருகே கருமொழி கிராமத்தில் மாட்டுவண்டி போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாட்டு வண்டி ஜோடிகள் பங்கேற்றன. பெரிய மாடு 8 மயில் சிறிய மாடு 6 மயிலென இரு பிரிவுகளாக போட்டி பிரிக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கும் சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசும் நினைவுக்கோப்பையும் வழங்கப்பட்டது பந்தய ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் சாலையின் இருபுறங்களிலும் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.