சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
இத்திருக்கோவிலில் பரிவார தெய்வங்களுடன் முருகப்பெருமான் குழந்தை வேலாயுத சுவாமியாக அருள் பாலித்து வருகிறார். முன்னதாக மூலவர் குழந்தை வேலாயுத முருகப்பெருமானுக்கு திருமஞ்சன பொடி, மஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட பல வகையான நறுமண திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து வெள்ளி கவசம் அணிவித்து பட்டு வஸ்திரம் சாற்றி மலர் மாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது பின்னர் சிறப்பு பூஜைகள் மற்றும் உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் நடத்தப்பட்டது. நிறைவாக உற்சவ தெய்வங்களுக்கும் ஏழு முக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.