சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காளையார்கோவில், மானாமதுரை, சிங்கம்புணரி, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நாள்தோறும் கள்ள சந்தையில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் போலீசார் சோதனை செய்ததில் 506 மதுபாட்டில், ரூபாய் 8830பறிமுதல் செய்தனர் மேலும் முருகேசன், சிவராஜன், ராஜா, கருப்பையா, ஆறுமுகம் , முருகானந்தம், வைரவன் ஆனந்தகுமார் உட்பட 24 நபர்கள் மீது வழக்குபதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.