சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகேயுள்ள தேவப்பட்டு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி கல்லல் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில், வீட்டிலிருந்தவர் திடீரென காணாமல் போனதாக கூறப்படுகிறது.
இவரை பெற்றோர், உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து சிறுமியின் தந்தை கல்லல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப்புகாரின் அடிப்படையில் காவல் நிலைய ஆய்வாளர் சந்திரன் வழக்குப்பதிவு செய்து, காணாமல் போன சிறுமி குறித்து விசாரித்து வருகிறார்.