காதலியை ஈர்க்கும் நோக்கில் இளைஞர் ஒருவர் புலி கூண்டுக்குள் சென்ற அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. குஜராத்தில் வசிக்கும் அருண்குமார் (26) என்பவர் அகமதாபாத்தில் உள்ள கன்காரியா உயிரியல் பூங்காவில் புலிகள் வசிக்கும் கூண்டுக்குள் இறங்கியிருக்கிறார். நல்வாய்ப்பாக அவரை புலி கவனிக்காமல் இருந்த நிலையில் பூங்கா ஊழியர்கள் வசமாக கவனித்தார்கள். அவர் மீது போலீஸ் வழக்கு பதிந்துள்ளது.