அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, நெல்லை மாவட்ட முன்னாள் நிர்வாகி குமார் எழுதியுள்ள கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்கடிதத்தில் அவர் கூறியதாவது, “நெல்லை, பாளையங்கோட்டை தொகுதிகளை 2026 தேர்தலில் அதிமுகவிற்கு ஒதுக்க வேண்டும், இல்லையென்றால் 2 தொகுதிகளிலும் கட்சியும் தொண்டர்களும் அழிந்து, நெல்லையில் அதிமுக இல்லை என்ற நிலை ஏற்படும்” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.