சென்னை மதுரவாயல் அடுத்த ஓடமா நகர் கண்ணியம்மன் கோயில் அருகே, தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அள்ளி சுத்தம் செய்துகொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டியில், பிறந்து ஒருநாளே ஆன பெண் குழந்தை சடலமாக இருந்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், குழந்தையின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.