நாகை - இலங்கை இடையே நாளை (பிப்.12) முதல் மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை துவங்க உள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், பாதுகாப்பு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன் கப்பல் சேவை தற்காலிமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கப்பல் போக்குவரத்து நாளை முதல் மீண்டும் தொடங்க உள்ளது. இனி வாரத்துக்கு செவ்வாய்க்கிழமை தவிர இதர 6 நாட்களும் கப்பல் இயக்கப்பட உள்ளது. டிக்கெட் முன் பதிவுக்கு www.sailsubham.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.