வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த 46 வயது விமானப் பணிப்பெண்ணை மருத்துவமனை ஊழியர் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. ஹரியாணாவின் குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தபோது, ஏப்ரல் 6ஆம் தேதி இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பெண் வென்டிலேட்டரில் அரை மயக்கத்தில் இருந்தபோது, ஊழியர் அவரை பலாத்காரம் செய்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சி அடிப்படையில் விசாரிக்கின்றனர்.