சீரியல் நடிகை ஜாமீனில் விடுவிப்பு

52பார்த்தது
சீரியல் நடிகை ஜாமீனில் விடுவிப்பு
தமிழ் தொலைக்காட்சி நடிகை ஜெயலட்சுமிக்கு ஜாமீனில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். சிநேகம் அறக்கட்டளை தொடர்பான பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அவர், தற்போது ஜாமீனில் வெளிவந்தார். கடந்த 20ஆம் தேதி சென்னை அண்ணாநகரில் போலீசாரால் கைது செய்யப்பட்டு நேற்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். நடிகை ஜெயலட்சுமி 2022-ல் 'சிநேகம் அறக்கட்டளை' பெயரில் லட்சக்கணக்கான ரூபாய் நன்கொடை வசூலித்ததாக புகார் எழுந்ததையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கவிஞர் சினேகன் அளித்த புகாரில் அவர் மீது நடவடிக்கை பாய்ந்தது குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி