பாகிஸ்தான், டிரோன்களை ஏவி வரும் நிலையில் ஜம்மு & காஷ்மீருக்கு கூடுதல் படைகள் அனுப்பப்பட்டுள்ளன. போர் பதற்றம் ஏற்பட்டுள்ள சூழலில் முதன்முறையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மணிப்பூரில் இருந்து பாதுகாப்பு படைகளின் சில பிரிவுகள் காஷ்மீருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. முப்படைகளின் தளபதிகள், தலைமை தளபதிகளுடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்திய நிலையில் இம்முடிவு எடுக்கப்பட்டது.