தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கும் அளிக்கும்படி பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகத்துக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். இந்நிலையில், சிபிசிஐடி போலீசார் அனுப்பிய சம்மனை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கேசவ விநாயகம் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து, இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கேசவ விநாயகம் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், விசாரணைக்கு அழைத்தால் செல்லவேண்டும் எனவும் எச்சரித்துள்ளது.