தமிழ்நாடு பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டம் மூலம், அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் கண் பார்வை குறைபாடுள்ள மாணவர்களுக்கு இலவச கண்ணாடி வழங்கப்படுகிறது. முதலில் பார்வை குறைபாடுள்ள மாணவனை பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் மேல்பரிசோதனைக்கு பரிந்துரை செய்வார்கள். அதன்பிறகு, அந்த மாணவர்களுக்கு பாராமெடிக்கல் உதவியாளர் மற்றும் கண் மருத்துவர் மூலம் முழுமையான கண் பரிசோதனை செய்யப்பட்டு இலவசமாக கண்ணாடி வழங்கப்படும்.