வெடி விபத்தில் தொழிலாளி பலி: பட்டாசு ஆலை உரிமையாளர் கைது

64பார்த்தது
வெடி விபத்தில் தொழிலாளி பலி: பட்டாசு ஆலை உரிமையாளர் கைது
சேலம் குப்பனூர் அருகே உள்ள கோமவல்லி வட்டம் வெள்ளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 50). இவர் அந்த பகுதியில் பட்டாசு ஆலை வைத்து நடத்தி வருகிறார். அதன் அருகே பட்டாசுகள் இருப்பு வைக்கும் குடோன் வைத்து உள்ளார்.
நேற்று முன்தினம் சிவகாசியை சேர்ந்த ஜெயராமன், முத்துராஜா, சின்னனூரை சேர்ந்த சுரேஷ்குமார் ஆகிய 3 பேர் பட்டாசு ஆலையில் இருந்து பட்டாசுகளை வேன் மூலம் குடோனுக்கு கொண்டு சென்றனர். பின்னர் பட்டாசுகளை குடோனில் அடுக்க கொண்டு சென்றனர்.
சிறையில் அடைப்பு
அப்போது எதிர்பாராத விதமாக பட்டாசு குடோனில் வெடி விபத்து ஏற்பட்டு குடோன் தரைமட்டமானது. இதில் தீயில் கருகி ஜெயராமன் உயிரிழந்தார். காயம் அடைந்த முத்துராஜா, சுரேஷ்குமார் ஆகியோர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து குப்பனூர் கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் காரிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி