களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளை வாங்க மக்கள் ஆர்வம்!

70பார்த்தது
களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளை வாங்க மக்கள் ஆர்வம்!
விநாயகர் சதுர்த்தி விழா நாளை (செப். 07) கொண்டாடப்படவுள்ள நிலையில், சேலம் தேர்வீதி, முதல் அக்ரஹாரம், அம்மாப்பேட்டை, செவ்வாய்பேட்டை, பால்மார்க்கெட், அஸ்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அரை அடி முதல் 10 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளது.

வித விதமான வடிவிலும், பல்வேறு வண்ணங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் காண்போரை வெகு கவர்ந்துள்ளது. குறிப்பாக, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வண்ணம் நவதானியங்கள், களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

விநாயகர் சிலைகளின் விற்பனை வழக்கத்தை விட தற்போது அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அதேபோல், விநாயகர் சிலைகளுக்கான அலங்காரப் பொருட்களின் விற்பனையும் களைக்கட்டியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி