சேலம்: மாங்காய் பறித்த போது தவறி விழுந்து முதியவர் சாவு

69பார்த்தது
சேலம்: மாங்காய் பறித்த போது தவறி விழுந்து முதியவர் சாவு
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள சர்க்கார் நாட்டாமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 75). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் நீர்முள்ளிக்குட்டை பகுதியில் பழனி என்பவரது தோட்டத்தில் மாங்காய் பறிக்கும் வேலைக்கு சென்றார். 

அப்போது, கல்கட்டு மீது ஏறி மரத்தில் மாங்காய் பறித்த போது, தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி