சிறை வார்டன்கள் 3 பேர் டிஸ்மிஸ்

72பார்த்தது
சிறை வார்டன்கள் 3 பேர் டிஸ்மிஸ்
சேலம் மத்திய சிறையில் 2-ம் நிலை காவலர்களாகபணியாற்றிய அருண் (27), சிவசங்கரன் (26) ஆகியோர் கடந்த ஆண்டு ஜனவரியில் இளம்பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதேபோல், சிறை காவலர் மணிவேலன் (29) என்பவர் மீது தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் காவல் நிலையத்தில் அடிதடி வழக்கு பதிவானதை தொடர்ந்து கடந்தாண்டு ஜூலை மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 3 பேர் மீதும் துறை ரீதியான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் மூவரையும் டிஸ்மிஸ் செய்து சிறைத்துறை டி. ஜி. பி. மகேஸ்வர் தயாள் உத்தரவிட்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி