சேலம் கொண்டலாம்பட்டி போலீசார் கொண்டலாம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்று இருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் கருப்பூர் அருகே உள்ள வெள்ளாளப்பட்டியை சேர்ந்த முத்துக்குமார் (வயது 27) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.