நாலெட்ஜ் கல்லூரி மலேசியா இன்டி பல்கலை கழக துணை வேந்தர் வருகை

79பார்த்தது
நாலெட்ஜ் கல்லூரி மலேசியா இன்டி பல்கலை கழக துணை வேந்தர் வருகை
நாலெட்ஜ் பொறியியல் கல்லூரி மலேசியா இன்டி சர்வதேச பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளனர். இதன் அடிப்படையில்  மலேசியா இன்டி சர்வதேச பல்கலைக்கழக சார்பு துணை வேந்தர்  கோஹாங்வெண் , சர்வதேச தொடர்புதுறை இயக்குனர்  அரசுராமன் ஆகியோர் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரிக்கு வருகைப் புரிந்து பேராசிரியர்கள் , மாணவர்களுடன் கலந்துரையாடினர்.
சிறப்பு விருந்தினராக கோஹாங் வெண் கலந்துகொண்டு பேசுகையில் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரி தொலைநோக்கு பார்வையிலும், கல்வித் தரம், வேலைவாய்ப்பில் முன்னோடியாக திகழ்ந்து விளங்குவதாகவும் பாராட்டி பேசினார். இன்டி பல்கலைக்கழகம் கியூஎஸ் தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ளது என்றும் கூறினார். ஆசியாவிலேயே 40க்கு மேற்பட்ட நாடுகளில் மாணவர்கள் கல்வி பயில்வதாக இப்பல்கலைக்கழகம் திகழ்கிறது என்றும் , நாலெட்ஜ் கல்லூரி மாணவர்களுக்கு இன்டி பல்கலைக்கழகத்தில் ஒரு பருவம் பயில சலுகை கட்டணம் வழங்கப்படும் என்றும் கூறினார். நாலெட்ஜ்பொறியியல் கல்லூரி, இன்டி பலகலைக்கழக மாணவர்கள் இணைந்து புதிய ஆராய்ச்சி மேற்கொள்ளவும், தரமான ஆய்வு கட்டுரைகளை வெளியிடவும் இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் துணைபுரியும் என்றும் தெரிவித்தார். நாலெட்ஜ் பொறியியல் கல்லூரி அறக்கட்டளை நிறுவனரும், முதல்வருமான சீனிவாசன், செயலாளர் குமார், பொருளாளர்  சுரேஷ்குமார், துணை முதல்வர்  விசாகவேல் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி