டூ வீலரில் சென்ற பெண் பஸ் சக்கரம் ஏறி பலி

59பார்த்தது
டூ வீலரில் சென்ற பெண் பஸ் சக்கரம் ஏறி பலி
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே பெருமாகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்த தறித்தொழிலாளி சரவணன். இவருடைய மனைவி ஜீவா (வயது 42). இவர் தனது உறவினர் விக்னேசுடன் காக்காபாளைத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் பெருமாகவுண்டம்பட்டி சென்றார். பெத்தானூர் பகுதியில் சென்ற போது பின்னால் வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜீவா மீது அந்த வழியாக வந்த பஸ் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே ஜீவா பரிதாபமாக இறந்தார். ஜீவாவுடன் வந்தவர் காயம் அடைந்தார். தகவல் அறிந்த மகுடஞ்சாவடி போலீசார் விரைந்து வந்து ஜீவா உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து மகுடஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி