சேலம் அமானி கொண்டலாம்பட்டியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 28). சீலநாயக்கன்பட்டி பைபாஸில் பேக்கரி வைத்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கடையின் ஷட்டரை முழுமையாக பூட்டாமல் திறந்து வைத்து விட்டு வெளியே சென்றதாக தெரிகிறது. மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது கல்லாபெட்டியில் வைத்திருந்த ரூ. 5 ஆயிரம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.