சேலம்: இருதரப்பினரிடையே தகராறு; பொதுமக்கள் சாலைமறியல்

57பார்த்தது
சேலம்: இருதரப்பினரிடையே தகராறு; பொதுமக்கள் சாலைமறியல்
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அடுத்த நல்லணம்பட்டி பகுதியில் வழித்தட பிரச்சினையில் இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டு அடிதடி நடைபெற்றது. இதில் காயமடைந்தவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் தாக்கியவர்களின் மீது நடவடிக்கை எடுக்க கோரி நல்லணம்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்தவுடன் மகுடஞ்சாவடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி