விநாயகா மிஷன் விம்ஸ் வளாகத்தில் செயல்படும் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் பட்டயப்படிப்புடன் கூடிய கூடுதல் சான்றிதழ் படிப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி மத்திய அரசின் ஸ்வயம் நெப்டல் மற்றும் பல்வேறு சர்வதேச அமைப்புகளான கோர்சிரா, ஏ.எச்.ஏ. மூலமும் சான்றிதழ் படிப்புகள் வழங்கப்படுகிறது.
இந்தாண்டு 900 மாணவர்கள் கூடுதல் சான்றிதழ் படிப்பு படித்துள்ளனர். அவர்களுக்கு முதல்வர் செந்தில்குமார் சான்றிதழ் வழங்கினார். தொடர்ந்து அவர் கூறும்போது அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் பட்டயப்படிப்புடன் வருங்கால வளர்ச்சிக்கு தகுந்தவாறு வேலை வாய்ப்பை எளிதாக்கும் துறை ரீதியான மற்றும் இதர பிற தொழில்நுட்ப ரீதியான திறனை வளர்த்துக்கொள்ளும் விதமாக சான்றிதழ் படிப்பு வழங்கி வருகிறோம். இந்த சான்றிதழ் மாணவர்களின் சிறந்த வேலை வாய்ப்பிற்கு வழி வகுக்கும் என்று கூறினார்.