சேலம் அருகே லாரி மோதி வாலிபர் பலி

74பார்த்தது
சேலம் அருகே உள்ளது பைரோஜி. இந்த ஊரைச் சேர்ந்தவர் லோகேஸ்வரன் (வயது 17). நேற்று இரவு லோகேஸ்வரன் இரண்டு சக்கர வாகனத்தில் மல்லூர் அருகே உள்ள பாலம்பட்டி பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது முன் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிரே லாரி ஒன்று வேகமாக வந்தது இதில் லாரியும் இரண்டு சக்கர வாகனமும் மோதி லோகேஸ்வரன் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். பின்னர் அவரை உடனே மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர் ஆனால் பாதி வழியில் லோகேஸ்வரன் இறந்து விட்டார். லோகேஸ்வரன் சடலத்தை மல்லூர் போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி