சேலம், ஆத்தூரில் இன்று மாலை ஆறு மணி அளவில் திடீரென்று மழை பெய்ய தொடங்கியது. இதனால் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், இந்த திடீர் மழையால் பூமி குளிர்ச்சியானது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் விவசாயத்திற்கு இம்மழை பயிர் செய்வதற்கு ஏதுவாக அமையும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.