சேலம் குகை பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 83). இவர் நேற்று முன்தினம் காக்காபாளையம் அருகே கனககிரி பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது சேலத்தில் இருந்து மகுடஞ்சாவடி நோக்கி வந்த சரக்குவேன் தியாகரா ஜன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த தியாகரா ஜனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மகுடஞ்சாவடி அரசு ஆஸ் பத்திரியில் சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர் கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். விபத்து குறித்து மகுடஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.