சங்ககிரி: வட்டி பணத்தை கேட்ட கடைக்காரர் மீது தாக்குதல்

80பார்த்தது
சங்ககிரி: வட்டி பணத்தை கேட்ட கடைக்காரர் மீது தாக்குதல்
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வைகுந்தம் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் சக்திவேல் (வயது 30). இவர் ஈரோட்டில் வீட்டு உபயோக பொருட்கள் கடை நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு அதே ஊரை சேர்ந்த கோகுல், ஜீவா, அஜித், ஆகிய 3 பேர் சேர்ந்து சக்திவேலிடம் ரூ. 50 ஆயிரம் கடனாக பெற்றனர்.

அந்த பணத்தை ஒரு மாதத்தில் திருப்பி தருவதாக கூறினார்கள். ஆனால் 7 மாதம் கழித்து ரூ. 50 ஆயிரத்தை மட்டும் திருப்பி கொடுத்தனர். ஆனால் அந்த பணத்திற்கு உண்டான வட்டி ரூ. 18 ஆயிரத்தை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் வட்டிதர மறுத்து சக்திவேலை கோகுல், ஜீவா, அஜித், கவின், கீர்த்தி ஆகிய 5 பேர் சேர்ந்து சரமாரியாக தாக்கி உள்ளனர்.

அப்போது ஏற்பட்ட தகராறில் சக்திவேல் கழுத்தில் இருந்த 3½ பவுன் தங்க நகையை காணவில்லை என சங்ககிரி போலீஸ் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார். அதன்பேரில் கோகுல், ஜீவா, அஜித், கவின், கீர்த்தி ஆகிய 5 பேர் மீது சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி