சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள பவளத்தானூர் ஏரி பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக தாரமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று கஞ்சா விற்றதாக, சேலம் அன்னதானப்பட்டியை சேர்ந்த கவுதம் மகன் சந்தோஷ் (வயது 21), தோப்பூரை சேர்ந்த கிருஷ்ணன் மகன் நவீன்குமார் (26) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.