சேலம் பொண்ணம்மாப்பேட்டை புது தெருவை சேர்ந்தவர் முருகன். இவரின் மகன் சக்திவேல் இவர் திருமண விழாக்களில் பூக்களை வைத்து அலங்காரம் செய்யும் பணியை செய்து வந்தார். இன்று காலை வாழப்பாடி வேப்பிலை பட்டியலில் இருந்து சேலம் நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தார் அம்மாபேட்டை காமராஜர் காலனி பகுதியில் வந்த போது முன்னாள் சென்ற அரசு பேருந்தை முந்தி செல்ல முயன்றார் அப்போது எதிர்பாராத விதமாக பேருந்தின் பின்பகுதியில் மோதியதில் பைக்கில் இருந்து தவறி விழுந்த சக்திவேல் பேருந்தின் டயரில் சிக்கினார். இதில் படுகாயம் அடைந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.