சேலம் கருங்கல்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாரி (வயது 26). இவர் புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருடைய வீட்டில் 4 பவுன் நகை திருட்டு போனது.
இதுகுறித்து செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மாரி வீட்டுக்குள் புகுந்து நகையை திருடியது டவுன் பகுதியை சேர்ந்த அரிகுமார் (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.