சேலத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

54பார்த்தது
சேலத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள கூட்டாத்துப்பட்டியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 44). தொழிலாளி. இவரது மனைவி தேவி (40). சதீஷ்குமாருக்கு கடன் பிரச்சினை இருந்தது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் தேவி கணவரிடம் கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்குச் சென்று விட்டார். நேற்று முன்தினம் இரவு தேவி உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டார். இதனால் மனமுடைந்த சதீஷ்குமார் வீட்டில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவலின் பேரில் காரிப்பட்டி போலீசார் விரைந்து சென்று சதீஷ்குமார் உடலை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி