சேலம் புதியபஸ் நிலையத்தில் மாயமான பெண்; போலீஸ் ஸ்டேசனில் ஆஜர்

74பார்த்தது
சேலம் புதியபஸ் நிலையத்தில் மாயமான பெண்; போலீஸ் ஸ்டேசனில் ஆஜர்
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் கவின். இவர் சம்பவத்தன்று சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு சேலத்தை சேர்ந்த 21 வயதுடைய பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. கடந்த 3-ந்தேதி மனைவியுடன் சேலத்திற்கு வந்து பொருட்கள் வாங்கினேன். அப்போது சிறுநீர் கழிப்பதாக கூறி விட்டு சென்ற மனைவி மாயமாகி விட்டார். அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என்று கூறியிருந்தார். 

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் மாயமான பெண் சேலம் டவுன் போலீசில் ஆஜரானார். போலீசார் பெண்ணிடம் விசாரணை நடத்தி அவருடைய பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி