சேலம் கலெக்டர் ஆபீசில் டீசலை ஊற்றி தீக்குளிக்க முயன்ற பெண்

65பார்த்தது
சேலம் மல்லமூப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் புஷ்பா (வயது 52). இவர் நேற்று தனது குடும்பத்துடன் கலெக்டர் அலுவலத்திற்கு வந்தார். பின்னர் திடீரென்று மறைத்து எடுத்து வந்திருந்த கேனை எடுத்து அதில் இருந்த டீசலை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் மீட்டு அப்புறப்படுத்தினர்.
தற்கொலை முயற்சி குறித்து புஷ்பா கூறும் போது, கடந்த பல ஆண்டுகளாக ராமாகவுண்டனூரில் அரசு புறம்போக்கு நிலத்தில் வசித்து வருகிறோம். தற்போது எங்களை மட்டும் வீட்டை விட்டு காலி செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் கூறி வருகின்றனர். இந்த வீடு இல்லை என்றால் எங்களுக்கு வேறு இடம் இல்லை. இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன்’ என்றார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி