கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி கிறிஸ்துவ மக்களுக்கு நல உதவிகள்

65பார்த்தது
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச்செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சக்திவேல் ஏற்பாட்டில், சேலம் மாநகர் அம்மாபேட்டை இம்மானுவேல் ஜெப ஐக்கிய சபை உறுப்பினர்கள் 500 பேருக்கு 5 கிலோ கோதுமை மாவு மற்றும் கேக் அடங்கிய கிறிஸ்துமஸ் சிறப்பு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதல்கட்டமாக கிறிஸ்துவ மக்கள் 10 பேருக்கு கழக பொதுச்செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தெரிவித்து வழங்கினார்.
அப்போது ஜெப ஐக்கிய சபையின் போதகர் செந்தில்குமார், கழக பொதுச்செயலாலர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு இனிப்புகள் மற்றும் கிறிஸ்துவர்களின் புனித நூலான பைபில் வழங்கி மகிழ்ச்சியை தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் போது, சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எம். கே. செல்வராஜ், ரவிச்சந்திரன், பகுதி செயலாளர்கள் சிவக்குமார், முருகன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி